பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கையர்கள்!!

சுமார் 100க்கும் அதிகமான இலங்கையில் இருந்து புலம்பெயர்தவர்கள் தமது சொந்த விருப்பத்தின் பெயரில் இலங்கைக்கு செல்வதற்கு பிரித்தானிய அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது என்று வெளிவுறவுத்துறை அமைச்சர் ஜெஸ்ஸி நோர்மன் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரித்தானிய ஆளுகைக்கு உட்பபட்ட இந்திய பெருங்கடல் பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையிலயே இவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இப்பிரதேசத்தில் அமெரிக்கா இராணுவ தளம் ஒன்றினை அமைப்பதற்காக அமெரிக்காவிற்கு இங்கிலாந்து குத்தகைக்கு வழங்கியுள்ளது. இதன் காரணமாக இவர்கள் தங்களுடைய நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளனர்.

இவர்கள் தங்களுடைய நாட்டிற்கு திரும்பும்போது துன்புறுத்தல்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்காக அற்குரிய சட்டபூர்வமான கடமைகளை இலங்கை அரசுடன் மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts