பாரிய நிதி மோசடி சம்பவம் : திலினி பிரியமாலியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மூவர் வசமாக சிக்கினர்-!

பாரிய நிதி மோசடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து நேற்று (15) திடீர் சோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

திலினி பிரியமாலி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்புடன் நேற்று காலை 10 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இடப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சிறை அதிகாரிகளின் விசேட பாதுகாப்புடன் கொழும்பு கோட்டை கிரிஷ் கட்டிடத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

திலினி ப்ரியமாலியின் பணப் பரிவர்த்தனைகள் பெரும்பாலும் இந்தக் கட்டிடத்திலேயே இடம்பெற்றுள்ளதுடன், 226 மில்லியன் ரூபா பெறுமதியான முறைப்பாடு தொடர்பான கொடுக்கல் வாங்கல் இந்தக் கட்டிடத்தில் இடம்பெற்றுள்ளதாக அண்மையில் தெரியவந்துள்ளது.

கடந்த 12ஆம் திகதி, சந்தேகநபரான திலினி பிரியமாலி, கொழும்பு உலக வர்த்தக நிலையத்திலுள்ள அவரது வர்த்தக நிலையத்துக்கு, இடப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

இதுவரை, இரண்டு முறை இடப் பரிசோதனைக்காக சிறையிலிருந்து வெளியே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 19 ஆம் திகதி வரை சிறைச்சாலையில் இருந்து பரிசோதனைக்காக அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, திலினி பிரியமாலியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மூன்று பேரும் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவருக்கும் திலினி பிரியமாலிக்கும் இடையில் தொடர்ச்சியாக தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் அவர்களது வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related Posts