தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நல்லிணக்க அமைச்சரவை உப குழு நியமனம் -!!!

புலம்பெயர் தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் சித்தாந்தங்கள், தமிழ் கட்சிகள், நாட்டிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் சித்தாந்தங்கள் குறித்து ஆராய்ந்து நல்லிணக்கம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் (17) அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த அமைச்சரவை உபகுழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts