வவுனியா – நெடுங்கேணி பகுதியில் நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணமாக தனிப்பட்ட பிரச்சினையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
இந்த துப்பாக்கிப் பிரயோகம் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கி சூட்டில் பிரமிளா என்ற 21 வயதான யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.