ரஷ்யா போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை சமீபத்தில் ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட அந்த 4 பிராந்தியங்களையும் ரஷ்யாவிடம் இருந்து மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.
ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்களிலும் ரஷ்ய ஜனாதிபதி புதின் ராணுவ சட்டத்தை அமல்படுத்தி உள்ளார். ராணுவ சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து புதின் குறிப்பிடவில்லை. அதே சமயம் இந்த உத்தரவு இன்று (20) முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.