
வங்காள விரிகுடாவில் தோன்றிய காற்று அழுத்தமானது தற்பொழுது அதே பகுதியில் நிலை கொன்டுள்ளதாகவும், இதன் காரணமாக பலத்த காற்று மற்றும் கடல்சீற்றம் என்பன அதிகரிக்கலாம் என வழி மண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது ஒக்டோபர் 23 ஆம் திகதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் 24 ஆம் திகதி சூறாவழியாகவும் மாறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும், அதன்பின் படிப்படியாக வங்களாதேஸ் கடலைநோக்கி நகர வாய்ப்பு உள்ளதாகவும், கடற்பரப்புக்கு மேல் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் கடல் கொந்தளிப்பாகவு காணப்படும் என வழிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.