
பலாலி வள்ளுவர் புரத்தில் 15 வயதுடைய சிறுமி தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று வீடு திரும்பிக் கொன்டு இருக்கையில் மோட்டார் சைக்கிலிள் பின்தொடர்ந்த நபர் சிறுமியின் தங்க சங்கிலியினை அபகரித்து விட்டு சிறுமியை கீழே தள்ளிவிட்டு தப்பித்து செல்லும்போது பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டார்.
இராணுவத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சந்தேக நபரினை பொலிஸார் அழைத்துச் சென்றபோது இராணுவத்தினர் தலையீடு செய்துள்ளதால் குழப்பநிலை ஏற்பட்டது அதன் பின்னர் ஊர் மக்களின் எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டது.