அட என்னப்பா ஆழும் கட்சியோடு இப்படி எல்லாம் மோதுறீங்களே ? என்று பலர் திகைப்பில் உள்ளார்கள். நடிகை கஸ்தூரி என்றாலே சர்சை தான். இவர் TV நிகழ்ச்சிகளில் தோன்றி அரசியல் விமர்சனங்களை வைப்பதோடு தனது ரிவீட்டரிலும், அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். பஜக கட்சி மற்றும் இந்தித்துவவாதிகள் பக்கம் சார்பாக பேசும், நடிகை கஸ்தூரி, திராவிடத்தையும் திராவிட கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். நேற்று இவர் போட்ட டுவீட்டால், தி.மு.க தொண்டர்கள் கொதித்துப் போய் உள்ளார்கள். தொண்டர்களின் அம்மா குறித்து கஸ்தூரி போட்டுள்ள பதிவு, மிகவும் கூச்சமான விடையம் தான்..
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிகம் பட்டாசு வெடிக்க சொன்ன வீடியோவை ரீட்வீட் செய்துள்ள கஸ்தூரி, “பாசிச பாஜக அண்ணாமலை தீபாவளி கொண்டாடுங்கன்னு சொன்னதுனாலே, இனமான திராவிடியா பசங்க எல்லாரும் இப்போ தீபாவளியை புறக்கணிக்ச்சாகணுமே, என்ன பண்ணுறது? “விடுமுறை நாள் ‘ னு சொல்லி பட்டாசு வெடிச்சு பிரியாணி திங்க வேண்டியதுதான்.” என்று குறிப்பிட்டு உள்ளார். இதில் இவர் குறிப்பிட்டுள்ள திராவிடீய பசங்க என்பதன் அர்த்தம் புரியாமல் இருக்குமா என்ன ?
ஏன் கஸ்தூரி இந்த மாதிரி எல்லாம் தரக் குறைவாக எழுதுகிறார் என்பது புரியவில்லை. ஆனால் கஸ்தூரி மீது கொலை வெறியில் உள்ளார்கள் தி.மு.க தொண்டர்கள். ஸ்டாலின் காதுவரை இந்த செய்தி எட்டி விட்டது என்கிறார்கள். நடவடிக்கை ஏதாவது எடுப்பாரா முதல்வர் ? என்பது தெரியவில்லை.
Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்