
வடமாகாணத்திலிருந்து இந்தியா சென்ற 12,500 க்கும் மேற்பட்ட குடும்ங்கள் தற்பொழுது மீண்டும் நாட்டுக்கு திரும்பி அவர்களுடைய சொந்த இடங்களில் மீண்டும் குடியேறியுள்ளனர்.
இவர்கள் தங்களது குடியுரிமை தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சிணைகள் மற்றும் இவர்களுக்கு நிவாரணங்களை உரிய முறையில் பெற்றுக்கொடுத்தல் என்பதனை உறுதிப்படுத்தும் முகமாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் தலமையில் நடமாடும் சேவையொன்று எதிர்வரும் 30 மற்றும் நவம்பர் 01 ஆம் திகதிகளில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.